நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இத்தாலிய சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அமைச்சரவை ஒப்புதல் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அமைச்சர் ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி, இத்தாலியில் 06 ஆண்டுகளாக வசித்து வரும் இலங்கையர்கள் இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற தகுதியுடையவர்கள் என்று அவர் மேலும் கூறினார்.
